Monday, December 23, 2019

சக்கை - நாவல் விமர்சனம்


கல்குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை நாம் அதிகம் இதுவரை அறிந்ததில்லை. அவர்களின் வாழ்க்கை சாதாரண வாழ்விலிருந்து மிகவும் பின்தங்கியது. கடுமையான உழைப்பில் கரைந்துவிடும் இம்மக்கள் தம் வாழ்க்கையில் கலை, பாரம்பரியம், கேளிக்கைகள் போன்றவைகள் என்னவென்று அறியாதவர்கள். கிராமங்களிலிருந்து விலகி தனித்த வாழ்க்கையை வாழ்பவர்கள். பல தசாப்தமாக தனித்து வாழும் இம்மக்கள் அறிந்த ஒரே சொல் கல்.

Thursday, December 19, 2019

இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன் சிறுகதை வாசிப்பனுபவம்



உடை இருப்பிடத்திற்கு முன்னே உணவு என்னும் அடிப்படையான விஷயம் வந்துவிடுகிறது. ஒருவேளை உணவு என்பதே உலகத்தில் பலருக்கு மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. ஆனால் வேறோரு பக்கத்தில் உணவை வீணாக கீழே கொட்டுவது நடக்கிறது. பலஇல்லங்களில் உணவு ஒரு ஆடம்பரம் தான். உணவகங்களின் வழியே நாம் அளிக்கும் பணம் அந்த உணவிற்கு பலமடங்கு அதிகம் செலுத்துகிறோம். திருமணங்களில் பல உணவு வகைகள் ஆடம்பரத்திற்கே சேர்க்கப்படுகின்றன. பல உணவுவகைகள் சாப்பிடப்படாமல் வீணாவதுதான் அதிகம். அந்த கெளரவம் நமக்கு தேவையாக இருக்கிறது. உணவை எவ்வளவு வீணாக்குகிறாரோ அவ்வளவு வசதி படைத்தவராகிறார்கள். உணவை மற்றவர்களுக்கு அளிப்பதில் இருக்கும் இன்பம்கூட கெளரவத்தில் இணைந்துவிடுகிறது. உணவை பெறுபவர் அதை கீழ்மையாக நினைக்கவேண்டியவராகிறார்.

Tuesday, December 10, 2019

பொன்முடி - திரைவிமர்சனம்



பொன்முடி படத்தை தொலைக்காட்சியில் பாதியிலிருந்துதான் பார்த்தேன். குடும்ப உறுப்பினர்களின் சமாதானம் பெற்று பார்க்க ஆரம்பிக்க, பிறகு குடும்ப உறுப்பினர்களே அந்த படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள். இன்றைய தேதியில் ஒரு சினிமாவை பார்க்கவும் அதை முழுமனதோடு நோக்கவும் நேரமின்றி திரிகிறோம் என்பது உண்மை. திரையரங்குகளில் பார்க்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. நான் இந்தவருடம் திரையரங்கிற்கு சென்று பார்த்த படங்கள் நான்கு. அதில் என் மகனுக்காக பார்த்த கார்ட்டூன் படங்கள் இரண்டு.

Friday, December 6, 2019

நாற்காலி - கி.ராஜநாராயணன் சிறுகதை வாசிப்பனுபவம்

நாற்காலிகள் அதிகாரத்திற்கானவை என்கிற எண்ணம் நமக்கு எப்போதும் உண்டு. சிம்மாசனம், செங்கோல், அரியணை, போன்றவைகள் இதைத்தான் குறிக்கின்றன. நிலப்பிரப்புத்துவ மனநிலையில் இதைச் சொல்லும்போதே குடையையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். பண்டைய மரபில் வெண்கொற்றக்குடையாக இருந்தது பின்னாலும் ஒருவருக்கு பிடிக்கப்படும் குடையாகவும், பிறகு தனக்கே பிடித்துக் கொள்ளும் குடையாகவும் ஆனது அதிகாரத்தின் படிநிலைகள். நிலப்பிரபுத்துவ வாழ்வில் செருப்பு அணிந்ததும் அதிகாரத்தின் குறியீடுதான்.