Monday, August 5, 2019

கலங்கிய நதி வாசிப்பனுபவம்



தில்லியில் இருந்த சமயங்களில் அறிந்த ஒன்று அங்குவாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீது தில்லிவாழ் மக்கள் எப்போதும் பொருட்படுத்தி அவர்களை மதித்து அவர்களுடன் இணக்கமாக மற்ற மக்களிடம் இருப்பது போல் இருந்ததில்லை என்பதுதான். அதாவது அவர்கள் இரண்டாம்தர மனிதர்களாகத்தான் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அகதிபோல் வாழ்வது ஒரு காரணம். அவர்கள் வாழ்ந்த இடம் மிக மோசமானதாக சூழல் தொடரும் இடமாக இன்றும் இருக்கிறது.

Thursday, August 1, 2019

கலங்கிய நதி விமர்சனம் - கலைச்செல்வி

 
ரமேஷ்சந்திரன் முடிந்தவரை நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரி. அவனின் மனைவி சுகன்யா. மகள் ப்ரியாவின் திடீர் இறப்பு அவர்களை நிலைகுலைய வைக்கிறது. அவன் அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அங்கு கோஷ் என்ற முதுநிலை பொறியாளரின் கடத்தலும், நுணுக்கமாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட பெருஊழல் ஒன்றும், ரமேஷை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. தான் கண்ட, கடந்த உண்மைகளை விபத்தில் அகப்பட்டு மருத்துவஓய்விலிருக்கும்போது புனைவாக்குகிறான்.