Wednesday, May 8, 2019

வெள்ளையானை: மகத்தான தோல்வியின் வரலாறு


ஆழமான தாக்கத்தையும் உணர்வெழுச்சியையும் உண்டாக்கும் பிரதிகளை மீண்டும் வாசிக்க நினைக்கும்போதே உள்ளூர ஒருவித நடுக்கம் கூடிவிடுகிறது. நுண்மையாக அடிபட்ட தருணங்களை வெளியே சொல்லமுடியாமல் தவிப்பதை போல, காலத்தின்முன் நிழலாக படிந்துவிட்ட பயத்தின் மென்னடுக்குபோல. ஏய்டனின் வெள்ளை மனச்சாட்சியும் காத்தவரானின் கருப்பு புத்திசாலித்தனமும் இருந்தும்கூட சென்னை ஐஸ்பேக்டரியில் போராடும் தலித் மக்களை காப்பாற்றமுடியவில்லை. தங்கள் முயற்சிகளால் உயர்சாதியும் இடைச்சாதியும் ஒரு துளிகூட தலித் மக்கள் முன்னேற்றத்தில் முன்னெடுக்க விடாமல் செய்கிறார்கள். இப்படியான உண்மை வரலாறு எப்படி மறைக்கப்படுகிறது?