Monday, April 22, 2019

தஞ்சைக் கூடல் 25



சற்று விரிந்தப் பரப்பிற்குள் தஞ்சைக் கூடல் வருமென்று நினைத்திருக்கவில்லை. ஏனெனில் அவசரத்தில் உருவான டெண்ட் கொட்டகை இது. ஆரம்பத்தில் சிறுகதைகள் பேசப்பட்டன. ஒரு சிற்றிதழில் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து பேசினார்கள். சில நேரங்களில் மொத்தமாக பேசினார்கள். எல்லோரும் படித்த ஒன்றை விவாதித்தார்கள். யாரும் படிக்காத ஒன்றையும் பேசினார்கள். பேச்சு சுவாரஸ்யம் இலக்கியத்தின் ஒரு பகுதிதான் போலும். ஒவ்வொரு மாதமும் ஒன்றை விஞ்சும் ஒன்று நிகழந்துக் கொண்டிருந்தது. புதிய இலக்குகளுக்குள் விரும்பிச் சென்றோம், சில நேரங்களில் தள்ளப்பட்டோம். ஒவ்வொரு மாதமும் ஒரு நாவல் குறித்து பேசுவோம் என முடிவானபோது, சற்று அதிர்ந்திருந்தோம். அதுவரை தற்காலியமான ஒன்று நிரந்தரமாகும் சூழல். நாவலை மனதில் நிறுத்துவார்களா என்று பயம்.