எல்லா மாதங்களிலும் கூடல் கூட்டம் பற்றிய செய்திகளை எழுதிவிடவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இந்த வருடத்து ஆரம்ப கூட்டத்தை ஆரம்பித்தோம். கூட்டம் என்பது எப்போது 10 பன்னிரெண்டு பேர் தான். கநாசுவிலிருந்து செல்லப்பா வரையிலும், கலாபிரியாவிலிருந்து ஜெயமோகன் வரையிலும் இலக்கிய விவாதங்கள் எப்போது 10 நபர்களுக்குள்தான் இருந்திருக்கின்றன. நான், சாமிநாதன், கண்ணன் தில்லைநாதன், முருகன், அய்யனார் மற்றும் தனபால் ஆகிய அன்பர்கள்தான் இந்த மாதத்தில். சற்று தாமதமாக நந்தி செல்லதுரையும், சுந்தர்ஜியும் வந்து சேர்ந்துக் கொண்டார்கள்.