கடைசியாக ஜல்லிகட்டுக்கு (ஏறுதழுவுதல்) அனுமதி கிடைத்துவிட்டது. ஜல்லிக்கட்டை
நடத்துவதற்கு எந்த கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அதற்கு ஆதரவு தெரிவிப்பது மக்கள்
ஜல்லிக்கட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று தெரிகிறது. இந்த புரிதல் வருவதற்கு
வருடங்கள் தேவைப்பட்டன என்று சொன்னால் மிகையில்லை.
வாடிவாசல் என்று ஒரு நாவலை சி.சு. செல்லப்பா எழுதியிருக்கிறார்.
தன் தந்தையை குத்திக் கொன்ற மாட்டை அதே ஜல்லிக்கட்டில் அவரது மகன் வந்து பலிதீர்ப்பதுதான்
கதை. இப்படி நேரடியாக வார்த்தைகளில்
எழுதிப் படிக்கும்போது குரூர மனம் வெளிப்படுவதாக தோன்றினாலும் உண்மையில், அந்த நாவலில் எந்த பழிவாங்கும் உணர்ச்சிகள்
இல்லாமல் தன் கடமையை செய்ய வந்ததாக நினைத்துக் கொள்ளும் ஒருவனது அகம் வெளிப்படும் நாவலாககதான்
இருக்கும்.